இங்கிலாந்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன்

லண்டன்,

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா சுப்ரமணியன். அவர் எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த போது குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது மூத்த மகன் வெற்றியழகன் என்பவர் பொறியியல் பட்டதாரி ஆவார். லண்டனில் பணிபுரிந்து வரும் அவர் கடந்த 15 வருடங்களாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற வெற்றியழகன் அந்நாட்டில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். இது மிகவும் மகிழ்சி அளிப்பதாக அவரது தந்தை பாப்பா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.