வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை சிறைபிடித்த மக்கள்…!

சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் தப்பியோடியதால் துணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், வீட்டிற்குள் பதுங்கியிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷை பிடித்தனர்.

பொதுமக்கள் உதவியுடன் அவனது கை, கால்களை கட்டி பட்டினம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா போதையில் இருந்த விக்னேஷை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து அவன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

விக்னேஷை போலீஸார் அலட்சியமாக கையாண்டதாகக் கூறி மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.