புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில்
பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்பு மணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த பதிவில், “டெல்லியில் வரும் 28ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வலியுறுத்தி வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.