Maamannan: மாமன்னன் விழாவில் ரஜினி கலந்துகொள்ளாதது ஏன் ? வெளியான காரணம்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார்
உதயநிதி
ஸ்டாலின். விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவே பின்பு ஒரே மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. உதயநிதி ஒரே மாதிரியான படங்களில் நடிக்கின்றார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மனிதன், கண்ணே கலைமானே, நிமிர், சைக்கோ என வித்யாசமான கதைகளங்களை கொண்ட படங்களாக தேர்தெடுத்து நடித்து ஒரு நடிகராக முன்னேறி வந்தார் உதயநிதி.

Maaveeran: மாவீரன் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்..புட்டு புட்டு வைத்த மிஸ்கின்..!

இந்நிலையில் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்கமாட்டேன் என்றும், அதன் பின் சூழ்நிலையை பொறுத்து படங்களில் நடித்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் உதயநிதி.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாமன்னன் படமே உதயநிதியின் கடைசி படம் எனலாம். இந்நிலையில் தன் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழாவை உதாயநிதி மிகப்பிரமாண்டமாக நடத்தியிருந்தார். ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவான இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

மேலும் இதுவரை வடிவேலு நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் என் செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் சிவகார்த்திகேயன் உட்பட பல நட்சத்திரங்கள் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி ஏன் மாமன்னன் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது ரஜினி தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரியில் இருப்பதால் தான் மாமன்னன் விழாவில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனதாம். ஒரே சமயத்தில் ஜெயிலர், லால் சலாம் என அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருப்பதன் காரணமாகவே தான் அவர் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.