அமித் ஷா வந்ததும் பவர் கட்… யார் பாத்த வேலை இது? கொதித்த பாஜக, ரணகளமான சென்னை!

வேலூரில் நடைபெறும் 9 ஆண்டுகால பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இவரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள் காத்திருந்தனர்.

அமித்ஷா வேலூர் வருவதற்கு முக்கிய காரணங்கள் என்ன ?

சென்னையில் திடீர் மின் தடை

அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சாலை முழுவதும் இருளில் மூழ்கியது. இருப்பினும் தனது காரில் இருந்து இறங்கி வந்து பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதையடுத்து கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குவதற்காக புறப்பட்டு சென்றார். அமித் ஷா சென்றதும் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு வேண்டுமென்றே இப்படிப்பட்ட வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.

அமித் ஷா வரும் போது எப்படி?

பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பேசுகையில், இந்த விஷயம் பாதுகாப்பு குறைபாடு. மிகவும் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டும். அதெப்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை விமான நிலையம் வந்ததும் மின்சாரம் துண்டிக்கப்படும். இதுபற்றி கண்டிப்பாக விசாரித்தே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அண்ணாமலை பேட்டி

இதுதொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நமது அரசில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் இணைந்து நேர்த்தியாக செயல்பட வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் அதையும் மீறி சில தவறுகள் நடந்து விடுகின்றன. அந்த வகையில் அமித் ஷா வரும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தின் கவுரவம்

என் அன்பான வேண்டுகோள். அனைத்திலும் அரசியல் பண்ணக் கூடாது. இதில் தமிழகத்தின் கவுரவம் அடங்கி இருக்கிறது. அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து பிரச்சினைகளை சரிசெய்வார்கள் என நம்புகிறேன். அதேசமயம் நமது தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.

அரசு தரப்பு விளக்கம்

இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பர். தவறுகள் இருந்தால் சரிசெய்வர் என்று தெரிவித்தார். மின்சாரம் தடைபட்டது தொடர்பாக பேசிய தமிழக மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, போரூர் துணை மின் நிலைய உயர்மின் அழுத்த பாதையில் திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது.

இதனால் செயிண்ட் தாமஸ் மவுண்ட், போரூர், பூந்தமல்லி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9.34 முதல் 10.12 மணி வரை மின் விநியோகம் தடைபட்டது. இதையடுத்து மாற்று வழியில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.