தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மதிப்பூதியத்தை உயர்த்துவத்ற்கு ரூ. 396 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நிதிநிலை அறிக்கைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான மானிய கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அப்போது தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 130 தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3600 லிருந்து 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3600 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.