நகைச்சுவை நடிகர் சலீம்குமார் பயாகிராபி வெளியீடு

மலையாளத் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் லீம்குமார். இடையில் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், பின்னர் முன்பு போல மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனராக மாறி ஒரு படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் சலீம் குமாரின் வாழ்க்கை வரலாறு 'ஈஸ்வரா வழக்கில்லல்லோ' என்கிற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சலீம்குமாரின் சொந்த ஊரான வட பரவூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் குஞ்சாகோ போபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார். நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். இந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள அதே தலைப்பில் சலீம்குமார் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்த படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் கூறிய ரமேஷ் பிஷரோடி, அதன் பிறகு சலீம்குமாரின் உடல்நிலை காரணமாக தாங்கள் எல்லாம் சேர்ந்து அவரை படம் இயக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறினார். அதனால் அந்த படத்திற்கான தலைப்பையே இந்த புத்தகத்திற்கு வைத்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவலை அவர் தெரிவித்தார்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.