இந்தியாவில் வரும் ஜூலை 5-ம் தேதி அறிமுகமாகிறது ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன்!

சென்னை: இந்தியாவில் எதிர்வரும் ஜூலை 5-ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்டின் கோடை கால அறிமுகமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுடன் ஒன்பிளஸ் நார்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன், நார்ட் பட்ஸ் 2ஆர், BWZ2 ANC என மேலும் மூன்று சாதனங்கள் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் எப்போது என ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில் ஜூலை 5-ம் தேதி மாலை 7 மணி அளவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 போன் நார்ட் 3 போனை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.