6 people died due to electric shock during Ratha Yatra | ரத யாத்திரையில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி

அகர்தலா, திரிபுராவில் ரத யாத்திரையின் போது, உயரழுத்த மின் கம்பியில் ரதம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உனகோடி மாவட்டத்தின் குமார்காட் பகுதியில், புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை கோவிலுக்கு திரும்பும் ‘உல்டா’ ரத யாத்திரை நேற்று நடந்தது.

இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இரும்பால் ஆன பிரமாண்ட ரதத்தை திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயரழுத்த மின்சார கம்பியில் ரதத்தின் மேல் பாகம் உரசியதில், மின்சாரம் பாய்ந்தது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயமடைந்த 15 பேரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற முதல்வர் மாணிக் சாஹா, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.