Election to 10 Rajya Sabha seats on July 24 | 10 ராஜ்ய சபா இடங்களுக்கு ஜூலை 24ல் தேர்தல்

புதுடில்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணமுல் காங்.,கின் டெரக் ஓ பிரையன் உள்ளிட்ட 10 பேரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 24ம் தேதி தேர்தல் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராஜ்ய சபாவில் 12 நியமன எம்.பி.,க் கள் உட்பட 250 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பா.ஜ., – திரிணமுல் காங்., மற்றும் காங்., உறுப்பினர்கள் 10 பேரின் பதவிக் காலம் ஜூலை 28ம் தேதியும், ஆக., 18ம் தேதியும் முடிவடைய உள்ளன.

பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணமுல் காங்.,கின் டெரக் ஓ பிரையன் ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்நிலையில், விரைவில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு ஜூலை 24ல் தேர்தல் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.