Maamannan:மாமன்னன் கதை இது தானா?: உதயநிதி ஸ்டாலின் சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Maamannan story: மாமன்னன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது அப்பொழுது புரியவில்லை தற்போது தான் புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

​மாமன்னன் ரிலீஸ்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாமன்னன் படம் பக்ரித் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் கதை என்னவென்பது தெரிய வந்துள்ளது.பாக்யராஜ்​”என்னை Belt எடுத்துட்டு துரத்துனாங்க” பாக்கியராஜ் பேச்சு!​​மாமன்னன் கதை​அதிகாரம் படைத்த அரசியல்வாதியாக இருக்கிறாராம் வடிவேலு. அவரின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்காப்பு கலை கற்றுத் தரும் வேலை செய்து வருகிறார். அப்பாவுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிகிறார் உதயநிதி. இந்நிலையில் வடிவேலுவுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்பொழுது தன் தந்தைக்கு ஆதரவாக செயல்படுகிறார். அப்பாவும், மகனும் சேர்ந்து அந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் கதை என தகவல் வெளியாகியுள்ளது.

​உதயநிதி ஸ்டாலின் சொன்னார்​முன்னதாக மாமன்னன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, இந்த படத்தில் நான் சாதாரண மன்னன். வடிவேலு தான் மாமன்னன் என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் தற்போது தான் புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். தேவர்மகன் படத்தை விமர்சித்தார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாமன்னன் கதையை கேட்டால் தேவர்மகன் தானே நினைவுக்கு வருகிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
​நடிப்புக்கு முழுக்கு​மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக இருக்கும் அவர் முழு நேரம் மக்கள் பணி செய்யப் போகிறார். அதனால் தான் நடித்தது போதும் என்று முடிவு எடுத்திருக்கிறார். இது அவரின் கடைசி படம் என்பதாலும் மாமன்னன் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. உதயநிதி ஸ்டாலினும், கீர்த்தி சுரேஷும் முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த ஜோடியை ரசிகர்களுக்கு ஏற்கனவே பிடித்துவிட்டது.

​Vijay:விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்கலாம், ஆனால்…: உதயநிதி ஸ்டாலின்

​முக்கியமான படம்​Leo: ஆட்டம் கண்ட லியோ படக்கழு, இன்னும் தொடரும்: ராஜேஸ்வரி பிரியாமாமன்னன் தன் கெரியரின் முக்கியமான படமாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் அவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லும் அளவுக்கு படம் நன்றாக வந்திருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் ஏதோ பெரிதாக சம்பவம் செய்திருக்கிறார் என்று பேசப்படுகிறது. மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் தன் அரசியலை கூறியிருக்கிறார் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த அரசியலை பற்றி தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

​வடிவேலு​மாமன்னன் படத்தில் ஃபஹத் ஃபாசில் இருக்கிறார். அசால்டாக கொடூர வில்லனாக நடிப்பதற்கு பெயர் போனவர் அவர். அதனால் உதயநிதி ஸ்டாலினை எப்படி எல்லாம் பாடாய் படுத்தியிருக்கிறார் ஃபஹத் என்பதை பார்க்கும் ஆவலும் ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் ராசாக் கண்ணு பாடலை பாடியிருக்கிறார் வடிவேலு. அந்த பாடல் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். தன்னை ரஹ்மான் பாட வைத்த விதத்தை பற்றி பெருமையாக பேசி வருகிறார் வடிவேலு.

​இளையராஜா செய்யாததை ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு செய்தார்: வடிவேலு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.