Maamannan: அந்த படம் எனக்கு சுத்தமா பிடிக்கல..ஓடாதுனு கமல் சார் கிட்டயே சொல்லிட்டேன்..ஓப்பனாக பேசிய உதயநிதி..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதி
இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்றும், இனி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் முடிவெடுத்துள்ளார். எனவே நாளை வெளியாகும் மாமன்னன் படமே அவரது கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் தேவைப்பட்டால் மூன்று வருடங்களுக்கு பிறகு நடித்தாலும் நடிப்பேன் என கூறியுள்ளார் உதயநிதி.

இந்நிலையில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாக இருக்கின்றது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள், படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மாமன்னன் எதிர்பார்ப்பு

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். எனவே இப்படம் கண்டிப்பாக உதயநிதிக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல பேட்டிகளில் கலந்து வருகின்றார் உதயநிதி.

Keerthy suresh: அரசியலில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் ? அதுவும் இந்த கட்சியிலா ?தீயாய் பரவும் தகவல்..!

அந்த வகையில் அவர் பேட்டிகளில் வெளிப்படையாக பல விஷயங்களை பேசியும் வருகின்றார். தனக்கும் நடிகர் விஜய்க்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் முதல் பல விஷயங்களை ஓப்பனாக பேசியுள்ளார் உதயநிதி. அந்த வகையில் அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தை தயாரித்ததை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஆதவன் படத்திற்கு பிறகு கமலின் மன்மதன் அம்பு படத்தை நான் தயாரித்தேன். கமலின் படத்தை தாயரிக்க வேண்டும் என்பது எனது பலநாள் ஆசை. அந்த ஆசை மன்மதன் அம்பு படத்தின் மூலம் நிறைவேறியது. இருந்தாலும் அப்படத்தை பார்த்துவிட்டு எனக்கு மிகவும் அப்சட்டாக இருந்தது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனை நான் இயக்குனர் கே.எஸ் ரவிகுமாரிடமும் ,கமலிடமுமே கூறிவிட்டேன்.

அப்சட்டான உதயநிதி

இப்படம் கண்டிப்பாக ஓடாது என நான் நினைத்த படி படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் உலகநாயகன் கமலின் படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை சரிவர பயன்படுத்த முடியவில்லையே என நான் வருத்தப்பட்டேன். அந்த வருத்தத்தை விக்ரம் படத்தின் மூலம் போக்கிக்கொண்டேன் என கூறியுள்ளார் உதயநிதி.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு பிறகு உதயநிதி ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார். இதன் அறிவிப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதையடுத்து உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதால் கமலின் தயாரிப்பில் உதயநிதியால் நடிக்கமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.