Maaveeran: மாவீரன் படத்திற்காக விஜய் வழியை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்து வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 என்ற படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக உருவாகும் இப்படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் சிவகார்திகேகேயன்.

அவரது திரைவாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைப்போல மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான படம் தானாம்.

மாவீரன் நிகழ்ச்சி

தன் முந்தைய படங்களை காட்டிலும் மாவீரன் படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இதை படத்தின் இயக்குனரான அஸ்வின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகவும், புது விதமான சிவகார்த்திகேயனை மாவீரன் திரைப்படம் வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர் அஸ்வின்.

Naa ready: லியோ படத்திற்க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? சலசலப்புக்கு அஞ்சாமல் தளபதி செய்த காரியம்..!

இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்த மாவீரன் திரைப்படம் ரஜினியின் ஜெயிலர் ஆகஸ்ட் மாதம் வெளியாவதால் இப்படம் ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இன்னும் சில வாரங்களில் மாவீரன் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். அதன் படி மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஜூலை 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கின்றது. சென்னையில் இருக்கும் சாய் ராம் கல்லூரியில் தான் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றதாம்.

விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் படத்தின் நிகழ்ச்சி சாய் ராம் கல்லூரியில் தான் நடக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தாராம். ஏனென்றால் பொதுவாக விஜய்யின் பட விழாக்கள் சாய் ராம் கல்லூரியில் தான் பெரும்பாலும் நடைபெற்று வருகின்றது. எனவே சிவகார்த்திகேயனும் இதன் காரணமாகத்தான் தன் பட விழாவை சாய் ராம் கல்லூரியில் நடத்தவேண்டும் என இருப்பதாக சிலர் பேசி வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் சிவகார்த்திகேயன் தன் படங்களில் ரஜினி மற்றும் விஜய்யை அதிகளவில் பின்தொடர்கின்றார் என்றும் சில விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் மாவீரன் நிகழ்ச்சியை சாய் ராம் கல்லூரியில் நடத்த உண்மை காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.