வெறும் ரூ.495 பேனா… அழியுற இங்க்… இதெல்லாம் நியாயமா ரிஷி சுனக்? பிரிட்டனில் வெடித்த பெரிய சர்ச்சை!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். இவர் குறித்த சர்ச்சை ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வேறொன்றுமில்லை. அவர் பயன்படுத்தும் பேனாவை சுற்றி தான் சர்ச்சையே. ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படிப்பட்ட பேனாவை பயன்படுத்த வேண்டும்.

அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா… மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதின்!

பிரதமர் பயன்படுத்தும் பேனா

அதற்கென்று சில வழிகாட்டுதல்கள் நிச்சயம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு குறிப்பிட்ட பிராண்டில் மிகவும் தரமானதாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பர். ஆனால் பிரதமர் ரிஷி சுனக் பயன்படுத்தும் பேனாவை பற்றி கேள்விப்பட்டால் பலரும் கிண்டல் தான் செய்வர். ஏனெனில் அவர் பயன்படுத்தும் பேனா அப்படி.

திடீரென 2 வயசு குறைந்த தென்கொரிய மக்கள்… யாருமே எதிர்பார்க்கல… இது எப்படி நடந்தது?

அழியும் இங்க்

இதன் விலை 4.75 பவுண்ட்கள். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில் 495 ரூபாய். இதில் பயன்படுத்தும் இங்க் என்பது எளிதில் அழியக் கூடியதாம். இந்த பேனாவின் விளம்பரத்தை பார்த்தாலே புரிந்துவிடும். அதாவது, நீங்கள் தவறாக எதும் எழுதி விட்டீர்களா? உடனே அழிப்பான்களை கொண்டு இங்கை அழித்துவிடலாம். எந்த பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஆவணங்களில் கையெழுத்து

பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் நாள்தோறும் பல்வேறு அரசு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டி வரும். இதுதவிர சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஐரோப்பிய யூனியன் முதல் ஐ.நா சபை வரை ஏராளமான கோப்புகளை கையாண்டு கையெழுத்து போட வேண்டும்.

ரிஷி சுனக் விவகாரம் வைரல்

இதற்கெல்லாம் அழியும் இங்க் கொண்ட பேனாவை தான் ரிஷி சுனக் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கூட அமைச்சரவையில் போட்ட கையொப்பம், மால்டோவாவில் நடந்த கூட்டத்தில் போட்ட கையெழுத்து ஆகியவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

துபாய் நகரின் முகமே மாறப் போகுது… AI நிகழ்த்தும் ஜாலம்… ஒரே ஒரு ஸ்கேனிங் போதும்!

கவனமாக செயல்படும் பிரிட்டன் அரசு

அதில் ரிஷி சுனக் பயன்படுத்திய பேனா குறித்த விஷயங்கள் தெளிவாக தெரிந்தன. அதேசமயம் பிரிட்டன் அரசு தரப்பு மிகவும் எச்சரிக்கை உடன் பேனா விஷயத்தை கையாண்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் ஊடகப் பிரிவு செயலாளர் கூறுகையில், இந்த அழியும் இங்க் கொண்ட பேனா அரசு விவகாரங்களில் மிக கவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களின் நம்பிக்கையை குலைக்கும்

பிரதமர் ஒருபோதும் கையெழுத்தை அழிப்பதற்கு அழிப்பான்களை பயன்படுத்தவில்லை. இனியும் அவ்வாறு செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.