கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்ச் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் வரும் 6 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில்

கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.