Kaavaalaa: காவாலா பாடலின் மூலமே கதையை கூறிய நெல்சன்..பாடலில் மறைந்திருக்கும் க்ளூஸ்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான திரைப்படமான ஜெயிலர் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

முதலில் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இந்திய திரையுலகில் இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்களை படக்குழு களமிறக்கியது.

வெளியான காவாலா

மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் சூப்பர்ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் இணைந்தனர். இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்தது. இவர்கள் இணைந்த பிறகு ஜெயிலர் தற்போது பான் இந்திய படமாக மாறியது.

Maamannan: வருங்கால முதல்வரான உதயநிதியின் நடிப்பு..பாராட்டி தள்ளி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்..!

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை பற்றி பாசிட்டிவான விஷயங்களே கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகின்றது. படத்தை பார்த்த ரஜினி மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்யும் என ரஜினி நம்பிக்கையில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் ஜெயிலர் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அனிருத்தின் இசையில் காவாலா என துவங்கும் இப்பாடல் தான் தற்போது வெளியாகிவுள்ளது.

படத்தின் நாயகியான தமன்னாவின் அசத்தலான நடனம், சூப்பர்ஸ்டாரின் மாஸ் என்ட்ரி என இப்பாடல் செம வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இப்பாடலை ரசிகர்கள் ரசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இப்பாடலை சிலர் டீகோட் செய்து வருகின்றனர்.

டீகோட் செய்த ரசிகர்கள்

அதன் படி சில ரசிகர்கள் இப்பாடலை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என கணித்துள்ளனர். என்னவென்றால் படத்தில் ஜெய்லராக இருக்கும் ரஜினி ஜெயிலில் இருந்து தப்பித்த கைதிகளை பிடிக்க செல்கின்றார். அந்த சமயத்தில் தான் இந்த பாடல் வரும் என சிலர் கமன்ட் அடித்து வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் சிலர் தமன்னாவும் இபபடத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தான். தப்பித்த கைதிகளை பிடிக்கத்தான் அவர் மாறு வேடத்தில் ஒரு கிளப்பில் நடனமாடுகிறார் என ஆளாளுக்கு ஒரு கதையை கூறி வருகின்றனர். எனவே படம் வெளியான பிறகு தான் படத்தின் உண்மையான கதை என்ன என்பது தெரியவரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.