ரெட் அலர்ட்… அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!

நாட்டின் வட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். யமுனை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தலைநகர் டெல்லி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. டெல்லியில் பல முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல மாவட்டங்களும் சமீபத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்திலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

அதிமுகவுக்கு ஓபிஎஸ் புற்றுநோயாகத்தான் இருப்பார்… ராஜன் செல்லப்பா கடும் தாக்கு!

கனமழையால், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கால், சாலைகள், ரயில் தண்டவாளங்கள், ஏராளமான வீடுகள் என இமாச்சலப்பிரதேசம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் சுமார் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கன்னம் மின்னுதே… கிரித்தி ஷெட்டியின் அசர வைக்கும் புகைப்படங்கள்!

அடுத்த ஐந்து நாட்களுக்கு மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பருவமழை தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. உத்தரகாண்டில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் இன்று டேராடூன், தெஹ்ரி, பவுரி மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் வடக்கு வங்கம் மற்றும் சிக்கிம் பகுதிகளுக்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.