காஷ்மீர் என்கவுண்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பூஞ்ச் மாவட்டம் சுரன்கொட் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.