கேராளாவின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த
காங்கிரஸ்
தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் இன்று (ஜூலை 18) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 80. உம்மன் சாண்டியின் மறைவு குறித்து அவரது மகன் சாண்டி உம்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாலை 4.30 மணிக்கு பதிவிட்டுள்ளார்.
“அப்பா மறைந்துவிட்டார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உம்மன் சாண்டியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.