சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக, திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என தெரிவித்து உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் அப்போதைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி. அப்போது நெடுஞ்சாலை துறைக்கான டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து திமுக […]