அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி "வார்னிங்".. வெளிறிய முகத்துடன் சொன்ன உதயநிதி.. ஆஆ..

சென்னை:
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் திமுகவினரை குறிவைத்துள்ள நிலையில், தனது அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர்

இதுதொடர்பாக கூறியது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை திமுக அமைச்சர்களை நோக்கி தனது பாய்ச்சலை காட்டி வருகிறது. முதலில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய அமலாக்கத்துறை அவரை தற்போது புழல் சிறைக்கே அனுப்பிவிட்டது.

இதற்கு அடுத்ததாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நெருங்கியுள்ள அமலாக்கத்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறது. இதில் அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் பொன்முடி கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், அமலாக்கத்துறை அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை கட்டம் கட்டும் என பாஜக தலைவர்கள் பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்கள். ஆட்சியை கலைக்கும் நோக்கிலேயே மத்திய அரசு இந்த ரெய்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான், இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ரெய்டு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று மாலை நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்த ஆலோசனை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர்களாகிய எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். அமைச்சர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லையென்றால் துறையை மாற்றிவிடுவேன் என முதல்வர் கண்டிப்புடன் தெரிவித்தார்” என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.