முதியோர் உதவித்தொகை ரூ.1200 அதிகரிப்பு.. பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு… தமிழக அரசு அதிரடி!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்தார்.

அதன்படி முதியோர் மற்றும் ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் 30 லட்சம் பேர் பயன் பெற்று வருகிறார்கள் என்றும் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முதியோர் உதவித் தொகை பெற சுமார் 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கலைஞர் உரிமைத் தொகை பெற 85 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதி வாய்ந்த ஒரு பயனாளி கூட விடுபட்டு போய்விடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்

தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, மணிப்பூர் விவகாரத்தில் வாயே திறக்காமல் இருப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என சாடினார். மேலும் மணிப்பூர் விவகாரத்தை ஏன் கண்டிக்கவில்லை என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.