ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடி உயர்வு… ஒரு கிலோ பன்னீர் இவ்வளவா? ஷாக்கில் மக்கள்!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டு நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் நிறுவன கிளைகள் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

பால் மட்டுமின்றி, தயில், மோர், நெய், பன்னீர், வெண்ணெய், பாதம் பவுடன், ஐஸ் க்ரீம், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் பொருட்களின் விலையை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பன்னீர் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பன்னீர் தற்போது 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் தட்டுப்பாடு இருக்கா? இல்லையா?

இதேபோல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரை கிலோ பன்னீர் தற்போது 300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் தற்போது 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஆவின் பாதம் மிக்ஸின் விலையும் உயத்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆவின் பாதம் பவுடர் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவற்றின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால் பொருட்களின் இந்த அதிரடி விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றால், விற்பனை விலையும் உயர்த்தப்பட வேண்டிய சூழல் இருப்பதாக கூறினார். இந்நிலையில் தற்போது பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.