சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் 2 பேர் திடீர் மரணம்… பரபரப்பு!

இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகஜன்லிட்டி என்ற 43 வயது பெண் பயணி மீண்டும் யாழ்பாணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இந்நிலையில் சிவகஜன்லிட்டி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக பரிசோதனை செய்த விமான நிலைய மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவித்தனர்.

இதேபோல் இலங்கையில் இருந்து சென்னைக்கு ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த ஜெயக்குமார் என்ற ஆண் பயணி ஒருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இலங்கையில் இருந்த சென்னை வந்த ஜெயக்குமார் குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச்சோதனை பிரிவுக்காக நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை

பயணி ஜெயக்குமார் மயங்கி விழுந்த தகவலை அறிந்த விமான நிலைய மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இலங்கை பயணிகள் 2 பேர் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இலங்கையை சேர்ந்த இரண்டு பயணிகள் திடீரென மரணம் அடைந்தது அங்கிருந்த ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.