நெய்வேலி விரையும் டிஜிபி சங்கர் ஜிவால்… போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை.. எச்சரிக்கை!

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. அன்புமணியை போலீசார் கைது செய்ததை கண்டித்து பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய பாமகவினர், காவல்துறை வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலவரத்தால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

என்எல்சியை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என்எல்சியின் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நெய்வேலியில் பேருந்து போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாமகவினர் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.

கலவரம் நடைபெற்ற என்எல்சி பகுதியில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்த நிலையில், தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நெய்வேலி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரம் குறித்து பேசிய சங்கர் ஜிவால், சுமார் 25 நிமிடம் நடைபெற்ற வன்முறை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

என்எல்சி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.