Jailer: போய் சொல்லுயா..நல்லா இருக்கும்..தளபதி கொடுத்த நம்பிக்கை..உருக்கமாக பேசிய நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கியுள்ள படக்குழு நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்தியது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி செம ஹிட்டடித்துள்ளது. முதல் முதலாக காவாலா என்ற பாடல் வெளியாகி எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஹுக்கும், ஜுஜுபி என்ற மாஸான பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இதையடுத்து நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரஜினியை சந்தித்தது எப்படி

இதில் பங்கேற்ற அனைவரும் பல விஷயங்களை கூறி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினர். குறிப்பாக ரஜினி, நெல்சன், கலாநிதி மாறன் ஆகியோர் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படத்தின் ரிசல்டையும், ரஜினி நெல்சனின் மீது வைத்த நம்பிக்கை பற்றியும் இவ்வாறு பல விஷயங்களை பற்றி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

Vidaamuyarchi: நான் என்ன பண்ணாலும் குறை சொல்றாங்க என வேதனைப்பட்ட அஜித்..உண்மையை உடைத்த பிரபலம்..!

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் வெளிப்படையாக பல விஷயங்களை பேசினார். அதாவது பீஸ்ட் படம் வெளியான பிறகு தான் நெகட்டிவ் மைண்ட் செட்டில் இருந்ததாகவும், எங்கே என்னை ஜெயிலர் படத்தை விட்டு நீக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் இருந்ததாகவும் கூறினார் நெல்சன். அதையெல்லாம் தாண்டி தலைவர் கொடுத்த நம்பிக்கையின் காரணமாகத்தான் என்னால் ஜெயிலர் படத்தை இயக்க முடிந்தது என்றார் நெல்சன்.

விஜய் கொடுத்த நம்பிக்கை

இந்நிலையில் நான் ரஜினியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது விஜய் தான் எனவும் நெல்சன் கூறியுள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது தான் ரஜினியை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்ததாம். முதலில் ரஜினியை சந்தித்து கதை சொல்ல மிகவும் தயங்கினாராம் நெல்சன்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அந்த சமயத்தில் விஜய் தான், போய் கதை சொல்லுயா, நல்ல இருக்கும் என தைரியம் கொடுத்து நெல்சனை ரஜினியிடம் கதை சொல்ல அனுப்பிவைத்துள்ளார். இதை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மேடையில் நெல்சன் கூறியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் நமக்குள் தான் ரஜினி – விஜய் என சண்டைபோட்டு வருகின்றோம். ஆனால் அவர்கள் எப்போதும் போல நல்ல நட்பில் தான் இருக்கின்றனர் என கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.