இரண்டு கால்கள் இல்லாதவரை.. இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கிய போலீஸார்.. "குடிக்க தண்ணீர் கேட்டாராம்"

லக்னோ: இரண்டு கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளியை போலீஸார் இரக்கமில்லாமல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த அளவுக்கு தாக்குதல் நடத்த அவர் செய்தது என்ன தெரியுமா? “தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்” எனக் கேட்டதற்காகவே அவரை போலீஸார் அடித்து நொறுக்கியுள்ளனர். என்ன நடந்தது? பார்க்கலாம்.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங் (26). பட்டதாரியான சச்சின் சிங், மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு மும்பை புறநகர் ரயலில் இருந்து கீழே விழுந்த சச்சின் சிங்கின் இரண்டு கால்களையும் ரயில் சக்கரங்கள் துண்டாக்கின.

இரண்டு கால்களையும் இழந்ததால் சச்சின் சிங்கின் மார்க்கெட்டிங் வேலையும் பறிபோனது. இதனால் சொந்த ஊருக்கே திரும்பிய சச்சின், அங்கு சிம் கார்டு விற்பனையாளராகவும், ஓட்டல் ஒன்றில் உணவு டெலிவரி செய்பவராகவும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு சச்சின் சிங் தனது மூன்று சக்கர சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆமைக் குஞ்சு நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த சச்சின், ஏதாவது வாகனம் வந்து ஆமை அடிப்பட்டுவிடும் எனக் கருதி, அந்த ஆமையை அங்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் விட்டுவிட்டு வந்துள்ளார்.

சைக்கிளில் அவ்வளவு தூரம் சென்றதால் அவருக்கு மிகவும் தண்ணீர் தாகம் அடித்துள்ளது. இதையடுத்து, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ‘பிராந்திய ரக்ஷாத் தள்’ படை போலீஸார் இருவரிடம் சச்சின் தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், “எவ்வளவு தைரியமிருந்தால் போலீஸ்காரர்களிடமே வந்து தண்ணீர் கேட்பாய்” எனக் கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கால் இல்லாதவர் என்ற இரக்கம் கூட இல்லாமல் இரண்டு போலீஸாரும் சேர்ந்து அவரை முகத்திலும், உடம்பிலும் கண்மூடித்தனமாக குத்தினர்.

நான் முதல்வராவதை விடுங்க.. உங்கள் மகன் பிசிசிஐ தலைவரானது எப்படி..? அமித் ஷாவுக்கு உதயநிதி நறுக் கேள்வி

இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்தார். ஆனால் அப்படியும் விடாத போலீஸார், அவரை துரத்திச் சென்று பிடித்து அடித்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சச்சின் சிங்கை தாக்கிய ராஜேந்திர மாணி, அபிஷேக் சிங் ஆகிய இரண்டு போலீஸ் காவலர்களையும் டிஸ்மிஸ் செய்து தியோரியா எஸ்.பி. உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.