ISRO: ஏழு சிங்கப்பூர் செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV-C56 ராக்கெட்! | Watch Video

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவு பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிலவின் தென் துருவத்தை நோக்கி விண்ணில் ஏவப்பட்டது.

இந்த சந்திரயான் – 3, ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்குப் பின் நிலவைச் சுற்றிவந்து, ஆகஸ்ட் 23-ம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 6.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘PSLV-C56’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சாட்’ என்ற பிரதான செயற்கை கோள் உட்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்த ‘டிஎஸ்-சாட்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. இன்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை துளை ரேடார் கருவி அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.