தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (VAO) இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். ஏன், தற்போது தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது மணல் கொள்ளையர்களை பிடிக்க சென்றார்.
அமுதா ஐஏஎஸ்க்கு நேர்ந்த சம்பவம்
அப்போது மணல் ஏற்றி வந்த லாரி, அமுதாவை இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்றது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்டார். இருப்பினும் மணல் கொள்ளையை ஒடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். இவ்வளவு மோசமான மணல் கொள்ளை விவகாரம் மீண்டும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மானாத்தாள் என்ற பகுதி உள்ளது.
சேலத்தில் நடந்த பிரச்சினை
இங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் வளைத்து பிடித்தார். அதன்பிறகு கொலை மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தற்காப்பு பயிற்சி தேவைப்படுகிறது.
சனாதனம் மற்றும் வர்ணாசிரமம் குறித்து பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இங்கு தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதற்காக அப்படி சொன்னார்? இதன் பின்னணி என்ன? ஸ்டாலின் எந்த நிகழ்வில் இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை கூறியிருக்கிறார்? போன்ற விஷயங்கள் பற்றி விரிவாக அலசலாம்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கோரிக்கை
தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் கிராம நிர்வாகம் என்பது வருவாய் துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் என்பவர் வட்டாட்சியர் தலைமையின் கீழ் செயல்படக் கூடியவர்.
சனாதனம் மற்றும் வர்ணாசிரமம் குறித்து பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இங்கு தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எதற்காக அப்படி சொன்னார்? இதன் பின்னணி என்ன? ஸ்டாலின் எந்த நிகழ்வில் இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை கூறியிருக்கிறார்? போன்ற விஷயங்கள் பற்றி விரிவாக அலசலாம்.
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம்
இந்நிலையில் வருவாய் துறை முன்வைத்த கோரிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசின் கூடுதல் செயலாளர் தி.வைதேகி கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பிற்காக கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலுவையில் இருக்கும் புகார்கள்
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பான விவரங்களை தமிழக அரசிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடித விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் அச்சமின்றி தங்கள் கடமையை நேர்மையான முறையில் செய்ய முடியாத சூழல் காணப்படுகிறது.
காவல்துறை மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.
தமிழக அரசின் உத்தரவு என்ன?
இதில் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தமிழக அரசு என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது? உயிருக்கு அச்சுறுத்தலை சந்திக்கும் அரசு அதிகாரிகளுக்கு எத்தகைய மாற்று ஏற்பாடுகளை செய்து தரப் போகின்றனர்? போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.