தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் எப்படி இருக்கும்? சென்னை மக்களுக்கு குட் நியூஸ்!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 9 வரைக்குமான காலகட்டத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த ஒரு வார காலத்துக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையானது ஓரிரு இடங்களில் 38 முதல் 40 டிகிசி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்ககூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஈரப்பதம், அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏறபடக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபை முதல் அமெரிக்கா வரை அனைவரும் புதிய இந்தியாவை பார்க்கின்றனர்

அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிசி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 40.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.