ஸ்டாலின் வாழ்த்து.. டிவீட்டை நீக்கிய ராணுவம்… காரணம் சொல்லுங்க… கொதித்தெழுந்த கனிமொழி!

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் பெண்களால் முன்னேறக் கூடும் – நம் வண்தமிழ் நாடும் எந்நாடும் என்று குறிப்பிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது மிகச்சிறந்த மைல்கல் என்றும் அவரின் பணிக்கும் சேவைக்கும் ஆர்வத்திற்கும் சல்யூட்ஸ் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவீட்டில் பதிவிட்டிருந்தார். இந்திய ராணுவம் பதிவிட்டிருந்த டிவீட்டை ரீடிவிட் செய்து முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியை கூறியிருந்தார். இந்நிலையில் ராணுவம், ஸ்டாலின் ரீடிவிட் செய்த டிவிட்டை நீக்கியுள்ளது.

இதையடுத்து திமுக எம்.பியும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி டிவிட்டியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழியின் இந்த பதிவை பார்த்த திமுகவினர் ஸ்டாலினின் பதிவு நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பல நெட்டிசன்கள், ராணுவம் அவர்களின் டிவீட்டைதான் நீக்கியுள்ளார்கள், முதல்வர் ஸ்டாலின் டிவீட்டை நீக்கவில்லை விளக்கி வருகின்றனர்.

இன்னும் பலர் இந்திய ராணுவம் அவர்கள் பதிவிடும் டிவீட்டை டெலிட் செய்வார்கள், அல்லது மீண்டும் பதிவிடுவார்கள், அது அவர்களின் இஷ்டம் என்றும் இதில் டென்ஷன் ஆக ஒன்றுமே இல்லை என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் டிவிட்டர் தளம் ரணகளமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.