Jailer: ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார்..மற்றவர்கள் எல்லாம்..ஓபனாக பேசிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து வருகின்றார் ரஜினி. கருப்பு வெள்ளையில் நடிக்க துவங்கி இன்று 3D தொழில்நுட்பம் வரை அனைத்திலும் நடித்துள்ள ரஜினிக்கு வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் இருக்கின்றனர். இருப்பினும் ரஜினியின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றிகளை பெறவில்லை.

குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருக்கின்றார்.

ரஜினி தான் சூப்பர்ஸ்டார்

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்ஸ் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று வெளியான ஜெயிலர் படத்தின் ட்ரைலர் சிறப்பான வரவேற்பை பெற்று யூடியூபில் சாதனை செய்து வருகின்றது.

Jailer: ரஜினி சூப்பர்ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்..வெளிப்படையாக பேசிய பிரபலம்..!

இந்நிலையில் இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற விவாதம் தான் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. ரஜினி ரசிகர்களோ தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர்ஸ்டார் ரஜினி தான் என்கின்றனர். இதையடுத்து விஜய் ரசிகர்களோ, அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என பேசி வருகின்றனர்.

பிரபு கருத்து

இதன் காரணமாகவே இவர் ரசிகர்களிடமும் மோதல் வெடித்து வருகின்றது. இந்த சூழலில் பிரபல நடிகர் பிரபு சூப்பர்ஸ்டார் டைட்டிலை பற்றிய தன் கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார், மற்ற நடிகர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள் என கூறியுள்ளார் பிரபு. இவரின் இந்த கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவும், விஜய் ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து எப்போது தான் ஓயுமோ என தெரியவில்லை என்று பொதுவான ரசிகர்கள் பேசி வருகின்றனர். விஜய் மற்றும் ரஜினி இருவரின் இடையே நல்ல உறவு இருந்து வரும் நிலையில் இவர்களின் ரசிகர்கள் தேவையில்லாமல் மோதலில் ஈடுபடுவது சரியல்ல என சிலர் அட்வைஸ் செய்தும் வருகின்றனர். இதையெல்லாம் கேட்டுவிட்டு ரசிகர்கள் மோதலை கைவிட்டால் நன்றாக இருக்கும் என்பது அனைவரது கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.