செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு சிக்கலா? தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவரிடம் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதனால் அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு சில மணி நேரங்களில் அந்த உத்தரவை திரும்பப் பெற்றார்.

இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார் என்றும், அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன், கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

கோவையில் மேயருடன் மோதல்-மேயரைப் பார்த்து மிரண்டு போன மாமன்ற கூட்டம்

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அமர்வில் கடந்த வாரம் நடைபெற்றது.

அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாலே ஒருவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க முடியாது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற பின்னர் எழுத்துப் பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) இரு தரப்பும் எழுத்துப் பூர்வமாக தங்கள் வாதங்களை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.