மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்ட நடைபவனியை வரவேற்கும் நிகழ்வு (08) மதவாச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் குறித்த நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக மதவாச்சி பிரதேச செயலாளர் எம். சி. மலவிஅராச்சியின் ஆலோசனைக்கு இணங்க மற்றும் சேப் பௌன்டேசன் உதவு நிறுவனத்தின் ஆதரவுடன் இவ்வரவேற்பு நிகழ்வு மற்றும் கலாசார பறிமாற்ற நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.