சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) இந்த ஆண்டு செவ்வாய்க் கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சேர்த்து சில தனியார் நிறுவனங்கள் 14ஆம் தேதியான திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் நான்கு நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் இதை பயன்படுத்தி சுற்றுலா செல்லவும், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் செய்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக சிறு நகரங்களில் உள்ள மக்கள் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் குடியேறுகின்றனர். பண்டிகை நாள்களிலும், தொடர் விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர்களுக்கு மொத்தமாக படையெடுப்பார்கள்.
இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். பேருந்துகள், ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் மதுரை to கோவா விமான சேவை
இதுபோன்ற நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. பல மடங்கு அதன் டிக்கெட் விலை உயர்கின்றன. ஆம்னி பேருந்துகளுக்கு கொடுக்கும் கட்டணத்தில் விமானத்திலேயே சென்றுவிடலாம் என்ற நிலையே ஏற்படுகிறது.
ஆனால் அதிலும் இடி விழுந்தாற் போல், விமான டிக்கெட்டுகளின் விலையும் உயந்துள்ளது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் கல்லா கட்டத் தொடங்கி விட்டனர்.
நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மும்பை, டெல்லியிலிருந்து செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் விலை அதிகரித்துள்ளது. இந்த தகவல் விமான பயணிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.