Jailer FDFS: ஒரே தியேட்டரில் Jailer FDFS பார்த்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஜெயிலர் படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் பலரும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

தளபதிக்கு பெயர் மாற்றம் தான் செய்யனும்
லீவு கிடைக்காதவர்கள் இன்று மாலை, இரவு நேரம் தியேட்டருக்கு செல்ல டிக்கெட் வாங்கி வைத்துவிட்டு அலுவகத்தில் ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

Jailer: தலைவர் ரசிகன்டா: ஜெயிலர் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த தனுஷ்

இந்நிலையில் சென்னையில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்க்க வந்தார் தனுஷ். அவர் வந்த சில நிமிடங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மகன்கள், லதா ரஜினிகாந்த், சவுந்தர்யாவின் மகன் வேத், அனிருத்தின் பெற்றோர் உள்ளிட்டோரும் வந்தார்கள்.

தியேட்டரில் ஜெயிலர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லதா ரஜினிகாந்த் கேக் வெட்டினார்.

ரஜினிகாந்த் குடும்பத்தார் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரே தியேட்டரில் படம் பார்ப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரியும். பிரிந்துவிட்டாலும் அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகவில்லை. அதனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் ஜெயிலர் படம் பார்க்க வந்திருக்கிறார்கள். ஜெயிலர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இதற்கிடையே ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் மண் சோறு சாப்பிட்டதுடன், குடியை விடுவதாக ரஜினி ரசிகர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள்.

மேலும் ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர் வாசல்களில் பட்டாசு வெடித்து திருவிழா போன்று கொண்டாடுகிறார்கள். ரஜினியின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது, மாலை அணிவிப்பது என அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Jailer: ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த தம்பதி: தூய தமிழில் பேசி அசத்தல்

ஜெயிலர் படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து ஒரு தம்பதி சென்னைக்கு வந்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த யசுடா தன் மனைவியுடன் சென்னைக்கு வந்து ஜெயிலர் படம் பார்த்திருக்கிறார்.

முத்து படம் பார்த்ததில் இருந்து நான் ரஜினி ரசிகன் என அவர் செய்தியாளர்களிடம் தமிழில் பேசியது தான் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.