Jailer: ஜெயிலர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்..கொந்தளித்த ரசிகர்கள்..!

​வரவேற்புரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையில் வெளியானது. ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் கடைசி படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படத்தின் மூலம் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு இருந்தது. அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வந்தனர்.அந்த கடுமையான உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்திற்கு அமோகமான வரவேற்பை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் வசூலும் மிகப்பெரியா சாதனை படைத்து வருகின்றது

​தலைவர் தரிசனம்ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் பழைய ரஜினியை பார்த்தது போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். மாஸான ஸ்டைலான ரஜினியை ஜெயிலர் படத்தில் காட்டியதற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரஜினி ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 80 மற்றும் 90 களில் வலம் வந்த ரஜினியை மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்துள்ளார் நெல்சன். இந்நிலையில் எந்திரன் படத்திற்கு பிறகு அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்த ரஜினியின் படமாக ஜெயிலர் இருக்கின்றது.

​வசூல் சாதனைஜெயிலர் திரைப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக இப்படத்தின் முன்பதிவே அமோகமாக இருந்தது. முன்பதிவின் மூலமே பலகோடி வசூலை பெற்றது ஜெயிலர். இதையடுத்து இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்துள்ளது. பொங்கலுக்கு வெளியான துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை ரஜினியின் ஜெயிலர் முறியடித்துள்ளது. மேலும் படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வருவதால் இனி வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூல் சாதனை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

​காட்சிகள் நீக்கம்ஜெயிலர் படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது. ஜெயிலர் படத்தில் சண்டை காட்சிகள் அதிகம் இருக்கின்றன. மேலும் அதில் சில காட்சிகளில் ஓவர் வன்முறையாக இருந்ததாக சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதுபோல சில காட்சிகளை அயல்நாடுகளில் நீக்கியுள்ளார்களாம் . லண்டன், துபாய் போன்ற சில நாடுகளில் ஜெயிலர் படத்தில் இருக்கும் ஓவர் வன்முறையான காட்சிகளை அந்நாட்டில் இருக்கும் திரையரங்கங்கள் கட் செய்துள்ளது. மேலும் மாஸான இன்டெர்வல் காட்சியையும் சில நாடுகள் கட் செய்ததால் அங்குள்ள ரஜினியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு சில நாடுகளில் இருக்கும் திரையரங்கங்களில் இப்படம் பாதியிலே சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.