டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில் தொடா்ந்து 10-வது முறையாகப் பிரதமா் மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. மேலும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் கலந்துகொண்டு, அங்கு கொடியேற்றி உரையாற்றினார்.
இதனால், செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துக்கொள்ளாதது குறித்து பா.ஜ.க விமர்சித்தது. அதற்கு விளக்கமளித்த மல்லிகார்ஜுன கார்கே, “எனக்கு கண் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அதனால் செங்கோட்டைக்கு வர இயலவில்லை. மேலும், எனது இல்லத்திலும், காங்கிரஸ் தலைமையகத்திலும் 9:30 மணிக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம் இருந்ததால், அதில் பங்கேற்க வேண்டிய சூழல் இருந்தது.
செங்கோட்டையிலிருந்து பிரதமர் வெளியேறாமல் மற்ற யாரும் வெளியேற முடியாத அளவு பாதுகாப்பு இருக்கும். எனவே குறித்த நேரத்துக்கு என்னால் அங்கிருந்து வெளியேற முடியாது என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க, “செங்கோட்டையில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துக்கொள்ளாததற்கு காரணம் என்று நம்பப்படும் நோயிலிருந்து, காங்கிரஸ் தலைவர் எப்படி உடனடியாக குணமடைந்தார்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “மல்லிகார்ஜுன கார்கே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக குணமடைந்து காங்கிரஸ் தலைமையகத்தில் கொடியேற்றி உரை நிகழ்த்தத் தொடங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs