ஓணம் பரிசுத் தொகுப்பில் கைவைத்த அரசு: இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்!

கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்பை போல கேரள அரசு ஓணம் பண்டிகைக் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிசு தொகுப்பை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி பரிசு தொகுப்பு பயனாளர்களின் எண்ணிக்கையை கேரள அரசு அடியோடு குறைத்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி போற பிளான் இருக்கா? உடனே இதை பாருங்க.. முக்கிய அறிவிப்பு!

அதாவது கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேரள அரசு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கியது. ஆனால் தற்போது நிதி நெருக்கடி காரணமாக மஞ்சள் குடும்ப அட்டை பயன்படுத்தும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அந்த்யோயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர் மற்றும் நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 80 லட்சம் பயனாளர்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளனர்.

அப்பாவுடன் அதிதி ஷங்கர்… பொறாமை பட வைக்கும் போட்டோஸ்!

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பரிசு தொகுப்பில் 17 பொருட்கள் இடம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அதுவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பில் 13 பொருட்கள் மட்டுமே உள்ளன. அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்படும் தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்புக்காக 425 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 32 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓணம் பரிசு தொகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிரடி குறைக்கப்பட்டு, பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பத அம்மாநில மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஓணம் பரிசு தொகுப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு அரசின் இந்த செயல் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.