மதுரை தற்போது தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் – புனலூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரை – செங்கோட்டை – மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை – குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27-ம்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ம் தேதியன்றும் தனது சேவையைத் தொடங்கும். ரயில் எண். 16327 மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27-ம் தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை அடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ், குருவாயூரிலிருந்து 28-ம் தேதி காலை 5.50-க்கு புறப்பட்டு, அன்று இரவு 7.50-க்கு மதுரை சென்றடையும்.
இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.