"குடையை எடுடி மாலா".. இன்று முதல் தமிழக்தில் மூன்று நாட்களுக்கு கொளுத்த போகும் மழை.. ஜில் அப்டேட்

சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை வெளுத்து வாங்க போவதாக தமிழ்நாடு வெதர்மேன் கூல் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை விளையாட போகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

தமிழகத்தில் கோடை முடிந்தாலும் வெயிலின் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் கடந்த சில தினங்களாக சென்னை, மதுரை, நாமக்கல், நெல்லை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில் பல இடங்களில் மாலை நல்ல மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரையில் காலையில் சுளீர் வெயிலும், மாலையில் ஜில்லென மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை வெளுத்து வாங்கப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கொடைக்கானல், ஈரோடு, நீலகிரி, சேலம், திருசசி, கரூர், டெல்டா, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். இன்றைக்கு இரவு தொடங்கி மூன்று நாட்கள் வரை மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை இரவு (ஆக.22) பரவலாக பலத்த மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு மழை இருப்பதால் பள்ளி – கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்துகொள்வது நல்லது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.