குவைத் டூ திருப்பதி… நான் ஸ்டாப்பா பறக்கப் போகுது… சீக்கிரமே புதிய விமான சேவை!

குவைத் என்றாலே பண மதிப்பில் ஜாம்பவனாக திகழும் நாடு என்பது தான் முதலில் நினைவிற்கு வரும். குவைத் நாட்டின் பணத்தில் ஒரு தினார் (Kuwait Dinar) என்றால் இந்திய ரூபாயில் 269.74 ரூபாய் என்று அர்த்தம். கிட்டதட்ட 270 ரூபாய். உலகில் வேறெந்த நாட்டு ரூபாயும், இந்திய ரூபாயை விட இந்த அளவிற்கு அதிகம் கிடையாது.

திருமலை திருப்பதி பெருமாளுக்கு 100 கிலோ வண்ண பூக்களை கொண்டு நடைபெற்ற புஷ்பயாகம்

குவைத் பயணம்

எனவே குவைத்தில் சென்று வேலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்பது இந்தியர்களின் கனவு. இந்நிலையில் குவைத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் விமான சேவையை கொண்டு வர திருப்பதி எம்.பி டாக்டர் எம்.குருமூர்த்தி தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர், ஏர் இந்தியா நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அமீரக குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்!

செப்டம்பர் டூ ஜனவரி சீசன்

அதற்கு நேர்மறையான பதில் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி வேறு சில வகைகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எல்லாம் கைகூடி வந்தால் வரும் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான சீசனில் குவைத்திற்கு நேரடி விமான சேவை கிடைத்துவிடும். இது திருப்பதியில் இருந்து குவைத் செல்ல விரும்பும் மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திருப்பதியில் இருந்து நேரடி விமானம்

தற்போது திருப்பதி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக குவைத் செல்லும் வகையில் விமானங்கள் கிடையாது. வேறு விமான நிலையங்களுக்கு சென்று தான் பயணம் செய்ய முடியும். எனவே திருப்பதி எம்.பி டாக்டர் எம்.குருமூர்த்தியின் முயற்சி வெற்றி பெற்றால் பயணம் எளிதாகி விடும். நேர விரயம் ஏற்படாது.

இரண்டு நன்மைகள்

விமான டிக்கெட் கட்டணமும் குறையும் எனக் கூறப்படுகிறது. திருப்பதி விமான நிலையத்திற்கு 2017ஆம் ஆண்டு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் கஸ்டம்ஸ், இம்மிகிரேஷன் போன்ற அடிப்படையான விஷயங்களை கட்டமைப்பதில் ஏற்பட்ட சிரமங்களால் சரிவர செயல்பட முடியவில்லை.

ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமா? – மசோதாவை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான் அதிபர்.. முற்றிய மோதல்!

முந்திக் கொண்ட விமான நிலையங்கள்

இதனால் திருப்பதியில் இருந்து சர்வதேச விமான பயணம் என்பது ஏமாற்றமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்கள் தங்களின் சர்வதேச விமான பயணத்தை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இது சாம்பிள் மட்டுமே

இதை மாற்றி காட்டும் முயற்சிக்கு தற்போது வித்திடப்பட்டுள்ளது. திருப்பதி டூ குவைத் விமான சேவை என்பது சர்வதேச பயணத்திற்கான தொடக்கம் தான். விரைவில் பல நாடுகளுக்கு திருப்பதியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.