டைவர்ஸுக்கு பின்னரும் மனைவியோடு டூர் போன ஜஸ்டின் ட்ரூடோ: காரணம் கேட்டா அசந்துருவீங்க!

கனடா நாட்டின் பிரதமரும், அந்நாட்டின் பிரபலமான அரசியல் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபியா ட்ரூடோவை பிரிவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ தம்பியின் வகுப்புத் தோழியான சோபியாவுடன் அவருக்கு சிறு வயது முதலே அறிமுகம் இருந்தது. 2003ஆம் ஆண்டு ஒரு தொண்டு நிகழ்ச்சியை நடத்தியபோது இருவருக்குள் நட்பு ஏற்பட்டு பிறகு காதலானது. டிவி தொகுப்பாளினி மற்றும் மாடலாக பணியாற்றி வந்த சோபியாவை 2005ஆம் ஆண்டு ட்ரூடோ கரம் பிடித்தார். இருவருக்கு சேவியர் ( 15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் கடந்த 18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர். எனினும், சமீப ஆண்டுகளில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவில் அதிகாரப்பூர்வ பயணங்களில் சோபியா அரிதினும் அரிதாகவே உடன் இருந்தார். இருவரும் கடந்த மாதம் ஓட்டாவா என்ற இடத்தில் நடந்த கனடா தின நிகழ்ச்சில் ஒன்றாக பங்கேற்றனர். இதுதான் இவர்கள் இருவரும் பொதுவெளியில் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாகும்.

பட்டியலின சிறுமி வீட்டில் நுழைந்த 8 பேர் – கத்தி முனையில் அரங்கேற்றிய கொடூரம்!

இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சோபியா ட்ரூடோ இருவரும் 18 ஆண்டுகால மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். இதனையடுத்து பசிபிக் மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறைக்குச் சென்று திரும்பினார்.

ரஜினிகாந்த் ஒரே பிசி – ஜெயலலிர்க்குப் பிறகு அடுத்தடுத்த நடவடிக்கை

இந்த நிலையில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள கார்ன்வாலில் நேற்று ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் பேசினார். மனைவியுடனான பிரிவுக்குப் பிறகு அவர் எதிர்கொண்ட முதல் பத்திரிகையாளர் சந்திப்பும் இதுதான். அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜஸ்டின் ட்ரூடோ “கனடா மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. கடந்த சில வாரங்களாக உங்களுடைய அன்பான வாழ்த்துகளுடனும், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்ததைக் குறிப்பிட்டும் தனிப்பட்ட மெசெஜ்கள் அனுப்பி இருந்தீர்கள். அவை பாசிட்டிவாகவும் அற்புதமாகவும் இருந்தன. குழந்தைகள் மீது கவனம் செலுத்தவும், ஒன்றாக இருப்பதில் கவனம் செலுத்தவும், அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறவும் கடந்த 10 நாட்களை செலவிட்டேன்.

‘வேலியே பயிரை மேயலாமா?’ நண்பரின் மகளிடம் அத்துமீறிய அதிகாரி – ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்!

எனது தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்ட அனைத்து கனடியர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவு நம்பமுடியாதபடி இருந்தது” என மனைவியுடனான பிரிவு குறித்து அப்போது மனம் திறந்து பேசினார். எனினும் பிரிவுக்கான காரணம் குறித்த கேள்வியை அவர் பதிலளிக்காமல் கடந்து சென்றுவிட்டார்.

பிரதமராக இருக்கும்போது மனைவியை பிரிந்த இரண்டாவது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். இவரது தந்தை பியர் ட்ரூடோவும், தாய் மார்கரெட்டும் 1977ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். 1984ஆம் ஆண்டு விவகாரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.