69வது தேசிய திரைப்பட விருதுகள்: கவனிக்கப்படாத ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா படங்கள்… ரசிகர்கள் அப்செட்.!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேசிய திரைப்பட விருது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 69 வது தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களின் பட்டியல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த விருது பட்டியல் தமிழ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ‘புஷ்பா’ படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார். நடிகை ஆலியா பட் ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்கும், நடிகை கீர்த்தி சனோன் ‘மிமி’ படத்திற்காகவும் சிறந்த நடிகைக்காக தேசிய விருதை பெற்றுள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்திற்காக சிறந்த பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 69 வது தேசிய விருதில் சிறந்த நடிகருக்காக ஜெய் பீம் படத்திற்காக சூர்யா அல்லது கர்ணனுக்காக தனுஷ் அல்லது சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யா வெல்லுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். காலையில் இருந்தே ட்விட்டரில் இவர்களின் யாருக்காவது ஒருவருக்கு தான் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.

தமிழ் திரையுலகை பெருமைப்பட செய்த கடைசி விவசாயி..மிஸ்ஸான விருதுகள்..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 69 வது தேசிய விருது சம்பந்தமான ரிசல்ட் தமிழ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. சூர்யா ‘ஜெய் பீம்’ படத்திலும் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை’ படத்திலும் தனுஷ் ‘கர்ணன்’ படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ரிசல்ட்டில் இவர்களது பெயர் இடம்பெறவில்லை.

மேலும் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு சிறந்த துணை நடிகர்களுக்கான விருது கிடைத்தும் என எதிர்பார்த்தனர். அதுவும் நடக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் அப்செட் ஆகியுள்ளனர். இதனிடையில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சமயத்தில் பெரிதான வரவேற்பினை பெறாத ‘கடைசி விவசாயி’ படம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களிடையும் கொண்டாட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ,சூர்யாவிற்கு மீண்டும் விருது கிடைக்குமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.