UPI மூலம் இணையம் இல்லாமலேயே கூட பணம் செலுத்தலாம்! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்திய சமீப காலங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது சிறிய பெட்டி கடைகளில் தொடங்கி பெரிய மால்கள் வரை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லுமளவுக்கு அந்த வளர்ச்சி உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிரடி!

என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் அதிகமாக பயன்பாட்டில் இருந்தாலும் இணைய வசதி இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைந்த இணையம் இருக்கும் இடங்களிலோ பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில்தான் இணையம் இல்லாமலும் கூட குறிப்பிட்ட அளவு பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது இந்திய ரிசர்வ் வங்கி.

பரிவர்த்தனை உச்சவரம்பு அதிகரிப்பு

UPI lite மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் 200 ரூபாய் வரை இணையம் இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி பயன்பாட்டில் இருந்தது. மேலும், 2000 ரூபாய் வரை இந்த வாலட்டில் சேமித்து வைத்து கொண்டு பயனர்கள் ஒரு முறை 200 ரூபாய் என்ற வீதத்தில் இணையம் இல்லாமலேயே UPI – ஐ பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இணையம் இல்லாமலேயே பணம் செலுத்தலாம்

இந்த வரம்பை தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. UPI Lite வாலட்டின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இனி 500 ரூபாய் வரை இணையம் இல்லாமலேயே பயனர்கள் UPI Lite வழியாக பிறருக்கு செலுத்த முடியும். இதே போல் NCMC கார்டுகளை ATM மற்றும் இதர ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதி மூலம் இணையம் இல்லாத சூழல்கள் அல்லது இணையம் இருந்து சரியாக கிடைக்காத நேரங்களில் இணையம் இல்லாமலேயே பயனர்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு

இதுகுறித்து ஆகஸ்ட் 10 தேதியிடப்பட்ட வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் விடுத்துள்ள அறிக்கையில், இணையம் இல்லாமல் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதர விதிமுறைகள் அப்படியே தொடர்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் Dr. சௌம்யா காந்தி கோஷ், மக்களின் பணப்பரிவர்த்தனை செயல்பாடுகளை சுலபமாக்கவும், சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனை தொழில்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த முடிவு ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

UPI Lite என்றால் என்ன?

UPI லைட் என்பது ஒரு ‘On Device Wallet’ போல செயல்படும் அம்சம். இதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 2000 வரை நீங்கள் போட்டு வைத்து கொள்ளலாம். இதன் மூலம், நீங்கள் UPI PIN இல்லாமலேயே இணையம் இல்லாத நேரத்திலும் கூட 500 ரூபாய் வரை பணம் செலுத்தி கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.