புழுங்கல் அரிசிக்கு 20% வரி… அடுத்தடுத்து அதிரடி காட்டும் மத்திய அரசு… விழிபிதுங்கும் உலக நாடுகள்!

தொடர் பருவமழை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தானியங்களின் உற்பத்தி கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மாதம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி வாங்க மக்கள் போட்டி போட்டனர். அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து அரிசி பைகளை வாங்கிச் சென்றனர். ஏராளமான மக்கள் அரிசி விலை உயரும் என்றும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் வழக்கத்தை விட அதிகளவு அரிசி வாங்கி சேகரித்தனர்.

நயன்தாரா பசங்க என்னமா வளர்ந்துட்டாங்க… கண்ணேபட்டும் போல… கலக்கல் போட்டோஸ்!

இந்நிலையில் மீண்டும் அரிசி ஏற்றுமதிக்கான பிடியை இறுக்கியுள்ளது மத்திய அரசு. அதாவது புழுங்கல் அரிசி ஏற்றுமதி மீது 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது. அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி ஏற்றுமதியில் அரசு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

பாஸ்மதி அல்லாத பச்சரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்த பிறகு வெளிநாடுகளில் அரிசி விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் உலக சந்தையில் அரிசி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சன்’னால் பதவிக்கு வந்தவர்களுக்கு சந்நியாசி குறித்து தெரியாது… ஸ்டாலினை சாடிய தமிழிசை!

சர்வதேச சந்தையில் இந்தியா 40 சதவீத அரிசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் இந்தியாவில் அரிசி விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.