செப்டம்பர் சம்பவம்… குவைத் நாட்டில் நிகழும் வானிலை மாற்றங்கள்… வெளியான சுவாரஸிய தகவல்!

அல்-உஜைரி ஆராய்ச்சி மையம்… இது குவைத் நாட்டின் முக்கியமான அறிவியல் ஆய்வு மற்றும் செயல்பட்டு மையமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய விழிப்புணர்வு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் என்னென்ன வானிலை மாற்றங்கள் குவைத் நாட்டில் நடக்கும் என்பதை அல்-உஜைரி ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

அசானி புயல் எதிரொலி; புதன்கிழமை வானிலை எப்படி இருக்கும்?
சுஹைல் நட்சத்திரம்

அதன்படி,
செப்டம்பர் 4ஆம் தேதி
சுஹைல் நட்சத்திரம் குவைத் மக்களால் நன்றாக பார்க்கும் வகையில் வானில் தோன்றும். இதற்கு வெப்பநிலை மாறுபாடு, இலையுதிர் காலத்தின் வருகை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. சுஹைல் நட்சத்திரம் என்பது தென் வானில் இடம்பெற்றுள்ள நட்சத்திர கூட்டமைப்பில் காணப்படும் ஒரு பிரகாசமாக நட்சத்திரம்.

குவைத் நாட்டில் நர்ஸ் வேலை… தேர்வு, இண்டர்வியூ எப்படி நடக்கும், யார் பொறுப்பு? அரசு வெளியிட்ட அறிவிப்பு!

சம கால அளவில் இரவு பகல்

இதனை லம்டா வெலோரும் என்றும் அழைப்பர். மிகவும் பெரிதாக ஒளியூட்டக்கூடிய மூன்றாவது பெரிய நட்சத்திரம் என்ற சிறப்பை பெற்றது. வானில் நாம் பார்க்கும் நட்சத்திரங்களில் சற்று பெரிதாக ஒளியூட்டும் வகையில் அமைந்திருக்கும். இதையடுத்து
செப்டம்பர் 23ஆம் தேதி
பகல் மற்றும் இரவு ஆகியவை சம நேர அளவை கொண்டிருக்கும்.

oogle News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

வறண்ட வானிலை

இது பருவ கால மாறுபாட்டை உணர்த்துவது கவனிக்கத்தக்கது. வரும்
செப்டம்பர் 30ஆம் தேதி
இலையுதிர் காலத்தை போல் சில்லென்ற காலநிலையை மக்கள் உணர ஆரம்பிப்பர். மாலை வேளையில் குளிர் அதிகமாக இருக்கும். இந்த 3 விஷயங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குவைத் நாட்டை பொறுத்தவரை புவியியல் ரீதியாக வறண்ட பகுதியாக பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 1 முதல்… கரண்ட் பில், வாட்டர் பில் கட்ட கறார்… குவைத் நாட்டில் வருகிறது பெரிய மாற்றம்!

பருவ காலங்கள் எப்படி இருக்கும்

நீண்ட கோடை காலத்தையும், குறுகிய குளிர் காலத்தையும் கொண்டது. கோடையில் மிக அதிகப்படியான வெப்பநிலையும், வறட்சியும் காணப்படும். குளிர்காலத்தில் வெப்பநிலை சற்றே குறைவாகவும், எப்போதாவது மழையையும் தரும். பிற நாடுகளை போன்றே குவைத்திலும் 4 விதமான பருவ காலங்கள் நிலவுகின்றன. குளிர்காலம் என்று எடுத்து கொண்டால் டிசம்பர் 6 முதல் பிப்ரவரி 15 வரை நீடிக்கும்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோடை வெயிலால் சிரமம்

வசந்த காலத்தை பொறுத்தவரை பிப்ரவரி 16 முதல் மே 20ஆம் தேதி வரை இருக்கும். வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். கோடைக் காலம் என்பது மே 21ல் தொடங்கி நவம்பர் 4ஆம் தேதி வரை இருக்கும். இந்த காலகட்டத்தை சமாளிப்பது தான் மிகவும் கடினம். கடைசியாக இலையுதிர் காலம் என்பது நவம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை நீடிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.