நானும், செல்வராகவனும் ஏன் பிரிந்தோம்னு 2 பேருக்கு தான் தெரியும்: சோனியா அகர்வால்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் சோனியா அகர்வால். முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

Leo ஆடியோ லான்ஞ்
செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார் சோனியா அகர்வால். திருமணமான 4 ஆண்டுகளில் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

சோனியா அகர்வாலை பிரிந்த பிறகு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். அவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சோனியா அகர்வால் சிங்கிளாக இருக்கிறார். செல்வராகவனை பிரிந்த பிறகு மீண்டும் படங்ளில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார் சோனியா அகர்வால். அவர் கூறியதாவது,

செல்வராகவனும், நானும் ஏன் பிரிந்தோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு இயக்குநராக அவருக்கு பிடிவாதம் அதிகம். ஆனால் வீட்டில் அப்படி இல்லை. அமைதியாக இருப்பார். எப்பொழுதும் கதை எழுதிக் கொண்டிருப்பார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

கணவன், மனைவியாக இருந்தவர்களால் விவாகரத்திற்கு பிறகு நண்பர்களாக இருக்க முடியாது. காதல் செத்துப் போன பிறகு எப்படி நண்பர்களாக இருக்க முடியும். இனி அவர் முகத்தையே பார்க்க மாட்டேன். எங்களுக்கு திருமணமான பிறகு இனி நீ படங்களில் நடிக்கக் கூடாது என அவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தினார்கள். அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன்.

உன்னை மிஸ் பண்றேன்: நள்ளிரவில் சமந்தாவுக்கு வீடியோ கால் செய்த ‘குஷி’ விஜய் தேவரகொண்டா

தற்போது நான் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டேன் என்றார்.

படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். விவாகரத்துக்கு பிறகு நண்பர்களாக இருக்க முடியாது என சோனியா அகர்வால் கூறியிருப்பது தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திரையுலகில் விவாகரத்து நடந்தால், நாங்கள் பிரிகிறோம், ஆனால் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று அறிவிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது விவாகரத்தாகிவிட்டால் நண்பர்களாக இருக்க முடியாது என்று சோனியா அகர்வால் கூறியிருக்கிறார். அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

சோனியா அகர்வால் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன்.

முன்னதாக செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிவதாக முடிவு செய்தபோது இந்த முடிவை கைவிடுங்கள் என இருவருக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குடும்பம் பிரிந்துவிடக் கூடாது என ரஜினிகாந்த் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.

வெறும் 18 நாளில் ரூ. 600 கோடி வசூலித்த ஜெயிலர்

மேலும் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்த போதும் கூட அவர்களை சேர்த்து வைக்க அதிக முயற்சி எடுத்தவர் ரஜினி. இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு எடுக்கும் முடிவா இது என கேட்டிருக்கிறார். மேலும் மகன்கள் லிங்கா, யாத்ராவுக்காகவாவது சேர்ந்து வாழுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவு முடிவில் உறுதியாக இருந்துவிட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.