Jio AirFiber, Jio Smart Home, Jio Laptop முதலிய அசத்தலான புதிய பிராடக்ட்களை செப்.19ல் வெளியிடுவதாக ஜியோ அறிவிப்பு!

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியாவை இலக்காக வைத்து துவங்கப்பட்ட ரிலையன்ஸ் தற்போது 450 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்பதாக பெருமையாக பேசியுள்ளார் முகேஷ் அம்பானி. அதன் ஒவ்வொரு பயனாளரும் மாதம் தோராயமாக 25GB டேட்டாவை பயன் படுத்துவதாகவும், மாதம் மொத்தமாக 1100 கோடி GB டேட்டா ட்ராஃபிக் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஜியோ 5G

கடந்த வருட அக்டோபர் மாதம் தொடங்கிய 5G நிறுவும் சேவை தற்போது இந்தியா முழுவதும் 96% நகரங்களில் முடிவடைந்து விட்டதாகவும், டிசம்பர் 23ம் தேதிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவிலும் 5G சேவை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

ஜியோ AirFiber

தற்போதைய நிலவரப்படி ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் தினம் 15,000 இடங்களை நாம் இணைத்து வருவதாகவும், இதே ஜியோ AirFiber சேவை மூலமாக 1,50,000 இணைப்புகளை தினமும் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19 அறிமுகம்

இதற்காக வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு Jio AirFiber சேவையை தொடங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி பல்வேறு புதிய சேவைகளையும் கூட ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் புதிய அறிவிப்புகள்

அந்த பட்டியலில் ஜியோ ஸ்மார்ட் ஹோம் சேவை, ஜியோ True5G Developer platform, ஜியோ True5G Lab, Jio AirFiber box, ஜியோ செப்டாப் பாக்ஸ், ஜியோ மற்றும் கூகுள், எச்பி இணைந்து ஜியோ கிளவுட் பிசி மற்றும் புதிய 5G ரீச்சார்ஜ் திட்டங்களையும் அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.