மக்களவை தேர்தல் 2024: யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும்? பாஜக ரெட் கார்டு டீலிங்… அதிரும் மினிஸ்டர்ஸ், எம்.பி.,ஸ்!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிருக்கும் விஷயம் 2024 மக்களவை தேர்தல். சுமார் 8 மாதங்கள் இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), இந்தியா (INDIA) என இருபெரும் கூட்டணிகள் தேர்தலில் களம் காண வியூகம் வகுத்து வருகின்றன. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் பாஜக vs பிற கட்சிகள். அதாவது, பாஜக தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி செய்துவிட்டது. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறது.

மூன்றாவது அணிக்கு வாய்ப்புஇதை தடுக்க எதிர்க்கட்சிகள் எந்த அளவிற்கு மும்முரம் காட்டப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாரதிய ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர் ராவ் தனித்து நிற்க திட்டமிட்டிருப்பதால் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி, பிஜூ ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் தனித்து நின்றாலும் பாஜகவிற்கு வெளியில் இருந்து ஆதரவுக் கரம் நீட்ட வாய்ப்பிருக்கிறது.பாஜக பலே வியூகம்இதையெல்லாம் தாண்டி பாஜக சில ஸ்பெஷல் திட்டங்களை களமிறக்கி விட்டுள்ளது. தங்கள் கட்சி வலுவாக இல்லாத தென்னிந்திய மாநிலங்களில் சிறப்பு கவனம், தற்போதைய அமைச்சர்கள், எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டு என அதிரடி காட்டவுள்ளது. இதில் உட்கட்சியில் BPஐ எகிறவிட்டிருக்கும் விஷயம் ரிப்போர்ட் கார்டு தான். கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர்கள், எம்.பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பிரத்யேக ரிப்போர்ட் கார்டு தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.​Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மூத்த அமைச்சர்களுக்கு சிக்கல்இதில் திருப்திகரமான செயல்பாடுகள் இல்லாதவர்களுக்கு வரும் 2024 மக்களவை தேர்தலில் சீட் கிடைக்காது என்று கூறுகின்றனர். அதில் மூத்த மற்றும் முக்கியமான அமைச்சர்கள் சிலர் இருப்பது கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. மேலும் கட்சிக்குள் வெறுப்புணர்வை சம்பாதித்து வைத்திருக்கும் நபர்களுக்கும் சீட் கிடையாது என்பது போல் பேச்சு அடிபடுகிறது. மற்றொரு கவனம் ஈர்க்கும் திட்டமும் பாஜக வைத்துள்ளதாம்.
​ரெடியாகும் ரிப்போர்ட் கார்டுகடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த பலம் வாய்ந்த தலைவர்களை வீழ்த்திய பாஜக எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் இவர்களின் ரிப்போர்ட் கார்டுகளும் ஒருமுறை புரட்டப்படும் என்கின்றனர். கடந்த சில மாதங்களாக மாநில வாரியாக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு வருகிறது.
உ.பி.,க்கு அதிக முக்கியத்துவம்அதில் தற்போதைய அமைச்சர்கள், எம்.பிக்கள் பலர் டேஞ்சர் கட்டத்தில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வியூகம் வகுத்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக எம்.பி தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு பிரதமர் மோடி (வாரணாசி), ராஜ்நாத் சிங் (லக்னோ), ஸ்மிருதி இரானி (அமேதி), ஹேமா மாலினி (மதுரா), அஜய் மிஷ்ரா (கேரி), சாக்‌ஷி மகாராஜ் (உன்னாவ்), மேனகா காந்தி (சுல்தான்பூர்), பிரிஜ் பூஷன் (கைசர்கஞ்ச்), ரவி கிஷன் (கோரக்பூர்) உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.மக்களவை தேர்தல் 2024இங்கு மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் கடந்த தேர்தலில் 62 இடங்களை பாஜக கைப்பற்றியது. இது தேசிய அளவில் பெரும்பான்மை பெற பெரிதும் உதவிகரமாக இருந்தது. அடுத்து வரும் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. இதற்கான ரிப்போர்ட் கார்டு தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்களாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.